School Leave: நவம்பர் 1-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!- வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு! School Local Holiday November 1 Happy News

School Leave: நவம்பர் 1-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!- வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

School Local Holiday November 1 Happy News

மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா: நவம்பர் 1ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தஞ்சாவூர்: தமிழர்களின் பெருமைக்குரிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

School Local Holiday November 1 Happy News

School Local Holiday November 1 Happy News: வானிலை காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறைகளை அறிவிப்பது ஒருபுறம் இருக்க, பண்பாடு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்காகவும் விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, அண்மையில் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், தற்போது தஞ்சை மாவட்டத்திற்குக் கிடைத்திருக்கும் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சதய விழா: அரசு விழாவாகக் கொண்டாட்டம்

மாமன்னர் ராஜராஜ சோழன், ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளில் பிறந்தார். அவர் பிறந்த இப்புனித நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்தச் சதய விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் 1040ஆவது சதய விழா, வரும் அக்டோபர் 31ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் நவம்பர் 1ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு, உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டு முதல், மாமன்னரின் பெருமையைப் பறைசாற்றும் இந்தச் சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நாட்களும் வரலாற்று ஆய்வரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகளுடன் தஞ்சாவூர் விழாக்கோலம் பூண உள்ளது.

Leave a Comment