நவம்பர் 1-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்.. மாணவர்கள் சோகம்..மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு! November 1 School Working Day Tiruvallur Announced
நவம்பர் 1-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்.. மாணவர்கள் சோகம்..மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!
November 1 School Working Day Tiruvallur Announced
November 1 School Working Day Tiruvallur Announced: திருவள்ளூர்: (அக்டோபர் 31, 2025) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் சனிக்கிழமை (நவம்பர் 01, 2025) அன்று அனைத்து வகை பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என மாவட்டக் கல்வி அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விடுமுறை ஈடுகட்டப்படுகிறது:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கனமழை காரணமாகவும், குறிப்பாக அக்டோபர் 22 ஆம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்வதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என மாவட்டக் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.



Post Comment