சம்பா பயிர் காப்பீடு: கடைசி தேதி நீட்டிப்பு! நவம்பர் 30 வரை பதிவு செய்யலாம் – தமிழக அரசு அறிவிப்பு | Tamil Nadu Samba Crop Insurance Deadline Extended to November 30 | PMFBY Registration Details

Tamil Nadu Samba Crop Insurance Deadline Extended to November 30

சம்பா நெல் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு! நவம்பர் 30 வரை பதிவு செய்யலாம்.

Tamil Nadu Samba Crop Insurance Deadline Extended விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) கீழ் சம்பா/தாளடி/பிசானம் நெல் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu Samba Crop Insurance Deadline Extended to November 30
Tamil Nadu Samba Crop Insurance Deadline Extended to November 30

முக்கியத் தகவல்:

  • பழைய காலக்கெடு: 2025 நவம்பர் 15ஆம் தேதி.

  • நீட்டிக்கப்பட்ட காலக்கெடு: 2025 நவம்பர் 30ஆம் தேதி.

கால நீட்டிப்பிற்கான காரணங்கள்:

சம்பா பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வரும் 27 மாவட்டங்களில், தொடர்ச்சியான கனமழை காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நடவுப் பணிகள் தாமதமடைந்தன. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டிருந்ததால், நிலப் பதிவு ஆவணமான ‘அடங்கல்’ வழங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இதன் விளைவாக, காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளானதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் இந்தக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பயன்பெறும் மாவட்டங்கள்:

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய 27 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விவசாயிகள் பதிவு செய்ய வேண்டிய இடங்கள்:

இதுவரை தங்கள் சம்பா நெல் பயிரைக் காப்பீடு செய்யாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட மையங்களில் ஏதேனும் ஒன்றில் நவம்பர் 30, 2025-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது:

  1. பொது சேவை மையங்கள்

  2. தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள்

  3. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்கள் பயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apply Online Link 

Leave a Comment